Thursday 4 April 2019

SEWA மாவட்ட செயலர் தோழர். ஆர்.மாதையன்
பணிநிறைவு - பாராட்டு - கௌரவிப்பு



SEWA-BSNL சேலம் மாவட்ட செயலர் தோழர். ஆர்.மாதையன் 31-03-2019 அன்று இலாக்கா பணி நிறைவு பெறுவதையொட்டி., SEWA-BSNL சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக 30-03-2019 அன்று தோழர். ஆர்.மாதையன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ் விழாவிற்கு., SEWA-BSNL நலச்சங்கத்தின் அகில இந்திய தலைமை ஆலோசகர் (Chief Advisor - CHQ) தோழர். P.N.பெருமாள் தலைமை தாங்கினார். அனைத்து தோழமை சங்கத் தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

நமது NFTE-BSNL மாவட்ட சங்கத்தின் சார்பாக., மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் தலைமையில் பங்கேற்று., தோழர். ஆர்.மாதையன் அவர்களை வாழ்த்தி., கௌரவித்தோம்.

நமது வாழ்த்துக்களையும்., பாராட்டுக்களையும்., ஏற்றுக்கொண்ட SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர். ஆர்.மாதையன் நன்றி தெரிவித்தார். மேலும்., அவரது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு., நெகிழ்வான ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில்., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி., மாவட்ட தணிக்கையாளர் தோழர். P.நாகேந்திரன்., மெயின் கிளைச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்., செவ்வை கிளைச் செயலர் தோழர். A.கருணாகரன்., மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். R.ராஜசேகரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்ட., கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






























SEWA மாவட்ட செயலர் தோழர். ஆர்.மாதையன் அவர்களின் பணி நிறைவுக் காலம் சிறப்புடன் விளங்க மனமார வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment