Thursday 4 October 2018

JE இலாக்காத்தேர்வு - மறுபரிசீலனை முடிவுகள்



28-01-2018 அன்று நடைபெற்ற 2016-ஆம் ஆண்டிற்கான JE இலாக்காத் தேர்வு மிகக் கடினமாக இருந்ததாலும்., தவறான கேள்விகள் மற்றும் தவறான பதில்கள் கேட்கப்பட்டதாலும் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து., மதிப்பெண்களில் தளர்வு செய்து புதிய தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என நமது NFTE சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.

அதன் அடிப்படையில்., மதிப்பெண் தளர்வு செய்யப்பட்டு., JE தேர்வு முடிவுகள் 03-10-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் 250 தோழர்களும்., தமிழகத்தில் OC/OBC பிரிவில் 16 தோழர்களும்., SC பிரிவில் 5 தோழர்களும்., ST பிரிவில் 1 தோழரும் என 22 தோழர்., தோழியர்கள் ஒருகட்ட விலக்கு அடிப்படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நமது சேலம் மாவட்டத்தில் 14 தோழர்., தோழியர்கள் தேர்வு எழுதினர். இதில் ஏற்கனவே 23-04-2018 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 2 தோழர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தற்போது மறுபரிசீலனை செய்யப்பட்ட இத் தேர்வு முடிவில் 2 தோழர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற தோழர்கள் விபரம்:
1. R.குணசேகரன் - 199503256 - 37.5 - (OC/OBC பிரிவு)
2. M.அப்துல்லாகான் - 199301647 - 32.5 - (OC/OBC பிரிவு)

தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு NFTE சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

நமது NFTE பேரியக்கத்தின் இந்த கடும் முயற்சியால் பலனடைந்து JE-க்களாக பதவி உயர்வு பெற உள்ள அனைத்து ஊழியர்களுக்கும்., நமது கோரிக்கையினை ஏற்று உத்திரவு வெளியிட்ட நிர்வாகத்திற்கும்., இந்த உத்திரவினை பெற்றுத்தந்த., நமது மத்திய., மாநில சங்கத்திற்கும்., நமது சேலம் மாவட்ட சங்கத்தின் நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment