Sunday, 9 September 2018

புதிய பதவி உயர்வுத்திட்டமும்...!
நமது கோரிக்கையும்...!


BSNL ஊழியர்களுக்கான புதிய NEPP பதவி உயர்வுத் திட்டம் 2010-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 01-10-2000 முதல் முன் தேதியிட்டு அமுல்படுத்தப் பட்டது.

இந்த NEPP பதவி உயர்வுத் திட்டம்., BSNL ஊழியர் சங்கம் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. இப் பதவி உயர்வுத் திட்டம் BSNL ஊழியர்களுக்கு பெரும் பாதிப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதனால் தான் நமது NFTE சங்கம் இப் பதவி உயர்வுத் திட்டத்தை Non-Executive Promotion Policy என்பதற்கு பதிலாக இது ஒரு Non-Executive Punishment Policy என விமர்சித்தது.

பதவியின் அடிப்படையில் பெற்ற பதவி உயர்வு கூட., ஒரு பதவி உயர்வாக கருதப்பட்டது.

SC மற்றும் ST ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும்., இந்த NEPP பதவி உயர்வுத் திட்டத்தில் விஸ்தரிக்கப் படவில்லை.

அதிகாரிகளுக்கான EPP (Executive Promotion Policy) பதவி உயர்வுத் திட்டத்திற்கும்., ஊழியர்களுக்கான NEPP (Non-Executive Promotion Policy) பதவி உயர்வுத் திட்டத்திற்கும் இடையே ஒப்பிட முடியாத அளவிற்கு மிக பெரிய வேற்றுமை இருந்தது.

புதிய NEPP பதவி உயர்வுத் திட்டத்தில் உள்ள சரத்துகளுக்கும் அதிகமாக விளக்கங்கள் வெளியிடப்பட்டன.

மேலும்., இது போன்ற பாதிப்புகளினால்., நமது மத்திய சங்கம்., இந்த NEPP பதவி உயர்வுத் திட்டம் ஊழியர்களுக்கு எதிராக உள்ளது எனக் கூறி ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தது. மேலும்., இந்த பதவி உயர்வுத் திட்டத்தை செழுமைப்படுத்தவும் முயற்சித்தது. ஆனால்., BSNL நிர்வாகம் ஊழியர் சங்கத்துடன் (அன்றைய அங்கீகரிக்கப்பட்ட சங்கமான BSNLEU சங்கத்துடன்) கலந்தாலோசனை செய்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டம் எனவே., இதில் மாற்றம் செய்திட வாய்ப்பே இல்லை எனக் கூறி மறுத்தது.

ஆனாலும்., நமது NFTE சங்கம் விடாமல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன் அடிப்படையில்., BSNL ஊழியர்களுக்கு சாதகமான ஒரு புதிய பதவி உயர்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி 06-09-2018 அன்று நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

No comments:

Post a Comment