Sunday, 9 September 2018

தேசியக்குழு - விவாதப்பொருள்கள்


37-வது...! தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்டத்தில்...!
விவாதிப்பதற்காக...! நமது சங்கத்தின் சார்பாக...!
நாம் எழுப்பியுள்ள பிரச்சனைகள்...!

நமது சங்கத்தின் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள்:
  • 10-ஆண்டுகள் பணி முடித்த கேசுவல் மஸ்தூர்களை 01-08-2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்திட வேண்டும்.
  • 01-10-2000-க்கு முன் தற்காலிக தகுதி பெற்று டெலிகாம் மெக்கானிக்-ஆக பதவி உயர்வு பெற்றவர்களை DOT ஊழியர்களாக கருத வேண்டும்.
  • 01-10-2000-க்கு முன் தற்காலிக தகுதி பெற்று RM-ஆக பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கு NEPP பதவி உயர்வு திட்டத்தின் படி முதல் பதவி உயர்வு 4 வருடங்களில் வழங்கப்பட வேண்டும்.
  • நேரடியாக பட்டப்படிப்பு தேர்வு எழுதியவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
  • BSNL ஊழியர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வாகத்திடம் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த தகுதி வரம்பை உயர்த்திட வேண்டும்.
  • ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் / ராஜ் பாசா அதிகாரி பதவிகளுக்கான பதவி உயர்வு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • 12 மாதங்கள் சேவை முடித்து 1-ஆம் தேதி பணியில் இல்லாமல் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத் தொகை வழங்கப்பட வேண்டும்.
  • 01-10-2000-க்கு பின் பணியில் சேர்ந்த TSM ஊழியர்களுக்கு ஜனாதிபதி உத்திரவு வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக., காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.
  • கார்ப்பரேட் அலுவலகத்தின் தேவையற்ற நீதிமன்ற மேல் முறையீடுகள் (Appeal) தவிர்த்து ஊழியர்களுக்கு சாதகமாக பெறப்பட்ட தீர்ப்புகள் அமுலாக்கம் செய்யப்படவேண்டும்.
  • 7-வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூபாய். 9000/- என பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை நமது BSNL ஊழியர்களுக்கும் விஸ்தரித்து வழங்கப்பட வேண்டும்.
  • BSNL நிர்வாகத்தின் பதவி உயர்வு தேர்வுகள் தற்போது இணையத் தளத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கான பயிற்சிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • கேசுவல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு ஊதியத்தை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment