Saturday 7 February 2015

இராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை கிளைகளின்
இணைந்த கூட்டுக்கிளை மாநாடு...















 








இராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை கிளைகளின் இணைந்த 
5 வது கூட்டுக் கிளை மாநாடு இராசிபுரம் தொலைபேசி நிலையத்தில் 
27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. 
மாநாட்டிற்கு கூட்டுத் தலைமையாக இராசிபுரம் கிளைத் தலைவர் 
தோழர். P. சுப்ரமணி தலைமை தாங்கினார்.

தோழர். M.S. முத்துசாமி, STS, தேசியக் கொடியையும்,
மாவட்ட துணைத் தலைவர் தோழர். R. பாலசுப்ரமணி நமது 
சம்மேளன கொடியையும் ஏற்றி சிறப்பித்தனர்.

 இராசிபுரம் கிளை செயலர் தோழர். M. அருள்மணி அனைவரையும்
வரவேற்று பேசினார். தோழர். P. அன்பழகன், இராசிபுரம் கிளை 
உதவி செயலர் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

மாவட்ட உதவி செயலர் தோழர். K. தேவராஜன் மாநாட்டை
துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் தோழர். S. சின்னசாமி, மாவட்ட பொருளர் 
தோழர். S. காமராஜ், மாவட்ட உதவி செயலர் தோழர். P. கஜேந்திரன்,
நாமக்கல் நகர கிளை செயலர் தோழர். V. மாதேஸ்வரன், 
நாமக்கல் ஊரக கிளை செயலர் தோழர். K. கணேசன் 
ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

நமது தொழிற்சங்க ஆசான் தோழர். M.S மற்றும் மாநில துணைத்
தலைவர் தோழர். P. ராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் சிறப்புரை வழங்கினார்.

ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கீழ்க் கண்ட தோழர்கள் தலைவர், செயலர், பொருளாராக கொண்ட...
பட்டியல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி...

இராசிபுரம் கிளையின் - புதிய நிர்வாகிகள்...   
தலைவர். தோழர். R. பாலசுப்ரமணி, TM  
செயலர். தோழர். M. அருள்மணி, TM   
பொருளர். தோழர். M. பாலசுப்ரமணியம், TM  

நாமகிரிபேட்டை கிளையின் - புதிய நிர்வாகிகள்...   
தலைவர். தோழர். S. சோலைமுத்து, TM 
செயலர். தோழர். R. குணசேகரன், TM   
பொருளர். தோழர். P. தாமோதரன், TM 

இறுதியாக நாமகிரிப்பேட்டை கிளை உதவி செயலர் 
தோழர். M. பாலசுப்ரமணியம் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது... அவர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment