Sunday, 11 January 2015

வரலாற்றில் இடம் பெறுவது போராட்டம்...
வரலாற்றை படைப்பது வர்க்கப் போராட்டம்...
அந்த வகையில்... 
புதிய வரலாற்றை... புதிய சகாப்தத்தை படைத்த... 
சேலம் தர்ணா போராட்டம்...






































நமது சேலம் மாவட்ட கூட்டமைப்பு (FORUM) முடிவின்படி 
அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாம் நாள் தர்ணா போராட்டம் 08-01-2015 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.

காலை 10.00 மணிக்கு துவங்கிய தர்ணா போராட்டத்திற்கு 
தோழர்கள். S.தமிழ்மணி, மாவட்ட தலைவர் (BSNLEU), S.சின்னசாமி,
மாவட்ட தலைவர் (NFTE-BSNL), P.சம்பத், மாவட்ட தலைவர் (SNEA),
S.கணபதி, மாவட்ட தலைவர் (AIBSNLEA), P.அன்பழகன், மாநில
துணைத் தலைவர் (TEPU) ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

எழுச்சி மிகு தர்ணா போராட்டத்தை இரும்பாலை (SAIL) 
பாதுகாப்புக் குழுவின் கன்வீனர் தோழர். P.பன்னீர்செல்வம் 
துவக்கி வைத்து உரை ஆற்றினார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) மாவட்ட தலைவர் தோழர். K.சுவாமிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) மாவட்ட தலைவர் தோழர். S.செல்லசாமி, BSNL ஓய்வூதியர் 
நலச் சங்கத்தின் (BSNLPWA) மாவட்ட செயலர் தோழர். K.ரமணி, 
SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். D.ஜெயபிரகாஷ், AIBSNLEA
மு. மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் தோழர். K.கோவிந்தராஜ்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். M.சண்முகசுந்தரம்,
SNEA மாவட்ட செயலர் தோழர். M.R.தியாகராஜன்,
TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, NFTE-BSNL
மாவட்ட செயலர் மற்றும் கூட்டமைப்பின் (FORUM) தலைவர்
தோழர். C.பாலகுமார், BSNLEU மாவட்ட செயலர்
மற்றும் கூட்டமைப்பின் (FORUM) கன்வீனர் தோழர். E.கோபால்
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர். P.வேணுகோபால்
நிறைவுரை ஆற்றினார்.

SNATTA மாவட்ட செயலர் தோழர். A.தனசேகரன் நன்றி கூறி 
தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

தோழர்களே...! நமது சேலம் மாவட்டம் எத்தனையோ போராட்ட களம்
கண்ட மாவட்டம்...! ஆனால் முதல் முறையாக நம்முடைய
அலுவலகத்தை விட்டு வெளியே வந்து (08-01-2015 அன்று) மாவட்ட
ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நம் சக்தி அறியாமல்... 
நாம் போராட்டம் நடத்தினோம்... அறிந்து கொண்டோம் நம் சக்தியை...
நாம் மட்டும் அல்லாமல்... அனைவரும் அறிந்திட செய்தோம்... 
புதிய வரலாற்றை... புதிய சகாப்தத்தை... படைத்தோம்...

கூட்டமைப்பு (FORUM) தலைவர்கள் சிந்தித்தப்படி ஊழியர்களும், அதிகாரிகளும் காலை 09-00 மணி முதலே அணி பார்க்காமல்... 
அணி அணியாக... வர துவங்கி விட்டனர். 500 தோழர், 
தோழியர்கள் அமர ஏற்பாடு செய்திருந்த தர்ணா பந்தலில் 
09-30 மணிக்கு நான்கு புறமும் நாற்காலிகள் நிரம்பி வழிந்தன.

காவல் துறை அனுமதி என்பது "ஒரு மணி நேரத்திற்கு" மட்டும் தான் ஆனாலும் துணிந்து நாம் 5 மணி நேரம் தர்ணா போராட்டத்தை நடத்தினோம். மக்கள் சொத்தை பாதுகாக்க... மக்களின் நண்பன் காவல் துறை நம் கோரிக்கையின் நியாயம் உணர்ந்து நமக்கு ஒத்துழைப்பு நல்கினர். அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி...!

அதே போல் (போராட்டத்தில் எப்போதும் பின் தங்கியிருக்கும்) மகளிர் அணியான பெண் தோழியர்கள் (ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட) 150க்கும் மேற்பட்டோர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து கலந்து கொண்டது சிறப்புக்குரிய அம்சமாகும்.

நாம் தர்ணா போராட்டத்தை துவக்கும் போது...
நம் வர்க்க உணர்வை... வெளிப்படுத்தும் விதமாக  நம் பந்தலுக்கு
அருகிலேயே மறியல் செய்து கைதாகி சிறை சென்ற
"ஊரக வளர்ச்சி துறை" ஊழியர்களை வாழ்த்தி முழக்கமிட்டோம்...
பின்னர் தான் தர்ணாவை துவக்கினோம்.

சேலம் மாவட்டம் முழுவதும் நம் போராட்டம் பேசப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு என்பதால்
சுமார் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை
செய்தி நிறுவனங்கள் நம் போராட்டத்தை பதிவு செய்தனர். 
பல நிறுவனங்கள் செய்தியை பிரசுரித்தும்... செய்தியை 
ஒளி பரப்பியும்.. நமக்கு உதவினர். அவர்களுக்கும் 
நமது நெஞ்சார்ந்த நன்றி...!!

 நமது போராட்டத்தை வெற்றிகரமாக்க கூட்டமைப்பு (FORUM),
பத்திரிக்கை மற்றும் செய்தி தொடர்பு குழு... தொண்டர் பணிக் குழு...
கையெழுத்து குழு (மக்களிடம் கையெழுத்து பெற)... 
என மூன்று குழுக்களை அமைத்தது சிறப்பு அம்சம். 
தர்ணா நடைபெற்ற நேரத்தில் அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும்
செய்தியை தொகுத்து வழங்கியது... பந்தலில் அமர்ந்திருந்த 
தோழர், தோழியர்களுக்கு அவர்கள் இடம் சென்று குடிநீர் வழங்கியது... 
பொது மக்களிடம் இருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட
கையெழுத்துக்கள் பெற்றது. என அந்த மூன்று குழுத் தோழர்களின்
பணி என்பது பாராட்டும் விதம் அமைந்தது. அவர்களுக்கும்
நமது நெஞ்சார்ந்த நன்றி...!!!

சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 750 க்கும் மேற்பட்ட
தோழர், தோழியர்கள் (ஊழியர்கள் / அதிகாரிகள்) தர்ணா
போராட்டத்தில் கலந்து கொண்டது என்பது 
புதிய வரலாறு... புதிய சகாப்தம்...
என்றால் அது மிகையாகாது.

தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள், அனைத்து சங்க மத்திய, மாநில, மாவட்ட, 
கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர், தோழியர்கள்
அனைவருக்கும் சேலம் மாவட்ட கூட்டமைப்பின் (FORUM)
சார்பாக... நெஞ்சார்ந்த நன்றி...!!!

2 comments: