சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...
சார்பாக... ஊரக கிளைகளில் நடைபெற்ற...
தெருமுனை பரப்புரை இயக்கம்...
ஓர் பார்வை......!
நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., அகில இந்திய அளவில் 11-02-2019 முதல் 15-02-2019 வரை 5 நாட்கள் தொடர்ந்து., மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.
இந்த அறைகூவலைத் தொடர்ந்து., மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கத்தை., நமது சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிட., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU - TMTCLU) சார்பாக., சேலம் மாவட்ட நகர பகுதிகளில் 9 மையங்களிலும்., ஊரக பகுதிகளில் (கிளைகளில்) 9 மையங்களிலும் என 18 மையங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடத்திட., திட்டமிட்டு இருந்தோம்.
அதன் அடிப்படையில்., சேலம் தொலைத்தொடர்பு மாவட்ட ஊரக கிளைகளில் (பகுதிகளில்) நடைபெற்ற., மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கத்தின் நிகழ்வுகள் மற்றும் சில காட்சிகள்...
சங்ககிரி:
சங்ககிரி கிளைகளில் பழைய பேருந்து நிலையம், புதிய எடப்பாடி சாலை மற்றும் திருச்செங்கோடு சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கிளைகளில் பேருந்து நிலையம், ஆனங்கூடர் சந்திப்பு மற்றும் பள்ளிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் கிளைகளில் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி கிளைகளில் பேருந்து நிலையம் மற்றும் மண்ணாய்க்கன்பட்டி பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
தலைவாசல்:
தலைவாசல் கிளைகளில் மும்முடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
ராசிபுரம்:
ராசிபுரம் கிளைகளில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் கிளைகளில் அண்ணா பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்தம், அரசினர் மருத்துவமனை, அரசினர் உயர்நிலை பள்ளி மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
மேட்டூர்:
மேட்டூர் கிளைகளில் மேட்டூர் ஆர்.எஸ். பேருந்து நிலையம், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி மற்றும் ராமன் நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடைபெற்றது.