Wednesday 20 February 2019

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக...
நடைபெற்ற... வேலை நிறுத்த விளக்க... 
சிறப்புக் கூட்டம்...


நமது தமிழ் மாநில., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL) முடிவின் படி., 2019 பிப்ரவரி 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் வேலை நிறுத்தத்தின்., கோரிக்கை விளக்க சிறப்புக் கூட்டம் 14-02-2019 வியாழக் கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு., சேலம்., மெயின் தொலைபேசி நிலையத்தில்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU - TMTCLU) சார்பாக., மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த., கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு., TEPU மாவட்டச் செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் தனது வரவேற்புரையோடு., கோரிக்கைகளை விளக்கி கருத்துரை ஆற்றினார்.

NFTE மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி மற்றும் TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ்., NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி., வேலை நிறுத்த விளக்க கூட்டத்தை முடித்து வைத்தார். 

இரவு 07-30 மணி வரை நடைபெற்ற., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU - TMTCLU) சார்பாக., நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள்.





























































மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU - TMTCLU) சார்பாக., நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment