Thursday 10 January 2019

2019 ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம் &
2-வது நாள் - வேலை நிறுத்த
ஆர்ப்பாட்டம்



மத்திய அரசின் தொழிலாளர் விரோத., மக்கள் விரோத., தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து., 10 மத்திய தொழிற்சங்கங்களின்., 12-அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி., 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் தேசம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக., நமது சேலம் மாவட்டத்தில் NFTE மற்றும் TMTCLU சார்பில்., 2-வது நாள் வேலை நிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்., 09-01-2019 புதன்கிழமை அன்று காலை 11-00 மணிக்கு சேலம்., மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை முழக்கத்தை., NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி எழுப்பினார்.

TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்., NFTE மெயின் கிளைச் செயலர் தோழர். R.வெள்ளையப்பன்., NFTE செவ்வை கிளைச் செயலர் தோழர். A.கருணாகரன்., NFTE மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். R.ராஜசேகரன்., NFTE குகை கிளைச் செயலர் தோழர். P.தேவா., TMTCLU மெயின் கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு., TMTCLU செவ்வை கிளைச் செயலர் தோழர். S.சக்திவேல் மற்றும் TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர் கோரிக்கை விளக்க மற்றும் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி நன்றி கூறி வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த வேலை நிறுத்த கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











































































இந்த வேலை நிறுத்த கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment