மாநிலச் செயலர்கள் கூட்டமும்...! முடிவுகளும்...!
நமது NFTE-BSNL சங்கத்தின் மாநிலச் செயலர்கள் கூட்டம் 29-06-2018 மற்றும் 30-06-2018 ஆகிய தேதிகளில் டெல்லி., Dakha International விடுதி கூட்ட அரங்கில்., நமது அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் அகமது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
- 3-வது ஊதியமாற்றக் குழுவில் NFTE சங்கத்தின் சார்பாக அகில இந்தியத் தலைவர் தோழர். இஸ்லாம் அகமது அவர்களும்., அகில இந்திய பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங் அவர்களும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மேலும்., ஊதியக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க நிர்வாகத்தை வலியுறுத்துவது.
- அடுத்த தேசிய செயற்குழுக்கூட்டம் உத்தரகண்ட் மாநிலம்., ஹரித்துவாரில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்.
- தேங்கிக்கிடக்கும்., ஊழியர்களின் எண்ணற்ற பிரச்சனைகளின் தீர்விற்காக பலகட்டப் போராட்டங்களை நடத்துவது.
- ஊதியத் தேதியை மாற்றி உத்திரவிட்ட BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவினை., இம் மாநிலச்செயலர்கள் கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு., அந்த உத்திரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
- ஊதிய மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட., நமது சங்கத்தின் உட்கட்டமைப்பு ஊதியக்குழுவின்., ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். மேலும்., ஊதிய மாற்றம் தொடர்பாக., அனைத்து சங்கங்களுடன் ஆலோசனை மற்றும் விவாதங்கள் நடத்தப்படும்.
No comments:
Post a Comment