Wednesday 28 March 2018

AUAB கூட்டமைப்பின் கூட்டமும்...!
தொடர் போராட்டமும்...!


BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின்..........! (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)
கூட்டம் 27-03-2018 அன்று புது டெல்லியில்., FNTO...!
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு., நமது NFTE - BSNL பேரியக்கத்தின்.,
பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்.,
தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA மற்றும் FNTO
ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில்., 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக
அமுல்படுத்திடவும்., துணை டவர் நிறுவனம் அமைத்துள்ளதை
திரும்ப பெறுவதை உறுதி செய்திடவும்., தீவிரமான போராட்டங்களை
முடிவு செய்வதற்காக., அனைத்து சங்க பிரதிநிதிகளின்..........!
தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகு......!
கீழ்க்கண்ட...! முடிவுகள் எடுக்கப்பட்டது.

AUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:
  • 12-04-2018 அன்று மத்திய., மாநில மற்றும் மாவட்ட தலைநகர் (அ) தலைமை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்துவது.
  • 19-04-2018 அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி., ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிப்பது.
  • 09-05-2018 (அல்லது) 10-05-2018 அன்று டெல்லியில்., தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்துவது. இக்  கருத்தரங்கில் பங்கேற்க., முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது.
  • இத்தனை போராட்டங்களையும் மீறி., அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது.
  • 3-வது ஊதிய மாற்றம் தொடர்பாக DPE செயலரை சந்திப்பது. உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 

எனவே...! தோழர்களே...!
நமது...! தொடர் போராட்டம்...! 
வரலாற்று வெற்றி கண்டிட...!
போர் முரசு கொட்டுவோம்...! 
போராட்ட களத்தை...! வலுவாக்குவோம்...!
நம் போர் வாள்-ஐ இன்னும் கூர் தீட்டுவோம்...!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

No comments:

Post a Comment