Saturday 3 September 2016

வேலை நிறுத்த... கோரிக்கை ஆர்ப்பாட்டம்...



மத்திய தொழிற்சங்கங்களின்... 12 அம்ச கோரிக்கைகள்...
மற்றும் நமது நிறுவனத்தின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நாடு முழுவதும் நடைபெற்ற... வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி...
நமது சேலம் மாவட்டத்தில்... நமது NFTE சங்கத்தின் சார்பாக...
02-09-2016 அன்று மதியம் 12.00 மணியளவில்...
மெய்யனூர் தொலைபேசி நிலையம் முன்பாக...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு... NFTE மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான... கோரிக்கை... முழக்கத்தை... குகை 
கிளை செயலர் தோழர். P.தேவா எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி...
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் கண்டன
சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக... மாவட்ட உதவி செயலர் தோழர். R.முருகேசன் 
நன்றி கூறி...  ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
























1 comment:

  1. தோழரே தயவு செய்து படம் காட்டாதிர்கள் அது ஒரு நல்ல கம்யூனிஸ்ட்க்கு அழகு அல்ல. நமது செயல்பாடு அனைத்தும் ஒரு நல்ல உயரிய இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.படம் காட்டுவது ஏமாத்துக்காரனுடைய தோற்றம்தான் அது ஒருசில புகைபடம்மட்டும் போதும். ஒருபானை சோற்றிற்க்கு ஒரு சோறு பதம் பார்த்தல் போதும். நல்ல கம்யூனிஸ்ட் தொழிற்சங்கவாதி விளம்பரத்திற்க்க போராட கூடாது

    ReplyDelete