Tuesday, 1 September 2015

 வெல்லட்டும்... வேலை நிறுத்தம்...








வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள்...
கண்ணீர் சிந்தி வாழ்வதோ...?

உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரம்...
உருப்படாமல் போவதோ...?

ஆவி போக்கி அடைந்த உரிமைகள்...
பாவிகளால் மாள்வதோ...?

இல்லை... இல்லை... இனியும் இல்லை...

குனிந்து இனியும் வாழ மாட்டோம்...
துணிந்து தெருவில் இறங்கி விட்டோம்...

உரிமைக் கரங்களை உயர்த்தி விட்டோம்...
சிந்தனைச் சிரங்களை நிமிர்த்தி விட்டோம்...

பகைவர்களே ஓடுங்கள்... பாவிகளே ஓடுங்கள்... 
எழுந்து விட்டது கோடிக்கால் பூதம்...

15 கோடி தொழிலாளர் பங்கேற்கும்...
உலகின் மாபெரும் உரிமைப் போராட்டம்...

No comments:

Post a Comment