BSNL ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக...
துவங்கியது... தர்ணா போராட்டம்...
ஜனவரி 6,7,8 நாடு தழுவிய மூன்று நாள் தொடர் தர்ணா
போராட்டத்தை நமது சேலம் மாவட்டத்தில் முதல்
இரண்டு நாட்கள் பொது மேலாளர் அலுவலகம் முன்பும் மூன்றாம்
நாள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பும்
நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதல் நாள் தர்ணா போராட்டம் 06-01-2015
அன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தோழர்கள். தமிழ்மணி (BSNLEU),
சின்னசாமி (NFTE-BSNL), சம்பத் (SNEA), கணபதி (AIBSNLEA), அன்பழகன்
(TEPU) ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.
தர்ணா போராட்டத்தை AIBSNLEA அகில இந்திய தலைவர்
தோழர். வேணுகோபால் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.
தோழர்கள். ஜெயபிரகாஷ் (SNEA), வெங்கட்ராமன் (NFTE-BSNL) ஹரிஹரன் (BSNLEU) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தோழர்கள். M.R.தியாகராஜன் (SNEA), M.சண்முகசுந்தரம் (AIBSNLEA), P.கிருஷ்ணமூர்த்தி (TEPU), C.பாலகுமார் (NFTE-BSNL), E.கோபால்
ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
திருச்செங்கோடு தோழர்கள் தங்களது பகுதியில் பெறப்பட்ட 2500
கையெழுத்துக்களை முதல் தவணையாக மாவட்ட FORUM
தலைவர்களிடம் வழங்கினர்.
இந்த தர்ணா போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட
(25 பெண்கள் உட்பட) தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment