ஊதியமாற்றம் - உறுதிமொழி - உறுதிபடுத்திட
தேசம் தழுவிய - உரிமை பேரணி
நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப் படுத்திடக் கோரி., நமது போராட்டத்தை தீவிரப் படுத்தும் விதமாக., பத்திரிக்கையார் சந்திப்பு மற்றும் தர்ணாப் போராட்டங்களைத் தொடர்ந்து., 14-11-2018 அன்று அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு - AUAB அறைகூவல் விடுத்துள்ளது.
இந்த அறைகூவலைத் தொடர்ந்து.,
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு - AUAB (NFTE - TEPU - SEWA BSNL) சார்பாக., 14-11-2018 புதன்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு., சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக., நமது உரிமைப் பேரணி துவங்கி., சேலம்., மெயின் தொலைபேசி நிலையம் (Main Exchange) வரை நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
BSNL நிறுவனம் காக்கும்., BSNL ஊழியர்களின் உரிமை காக்கும்., இந்த புனிதப் போரில்., நம் உரிமைப் போரில்., நாம் அனைவரும் திரளாக பங்கேற்போம்., நமது கோரிக்கைளை வென்றெடுப்போம்.
தோழர்களே...!
தோழர்களே...!
அணி திரள்வோம்...! ஆர்ப்பரிப்போம்...!
ஊதிய மாற்றம் நம் உரிமை...! எனவே...!
உரிமைக்குரல்...! ஒலிப்போம்...!
உரக்க...! ஒலிப்போம்...!
ஒலிக்காமல் ஏதும்...!
பலிக்காது......!
விரல் புரட்சி கொண்டு...! வீழ்த்துவோம்
விரோத சர்க்காரை...! உரிமை புரட்சி கொண்டு...!
உருவாக்குவோம் நமக்கான சர்க்காரை...!
திரள்வீர்......! தோழர்களே......!
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment