Thursday 3 August 2017

தலைமை செயலகக் கூட்டமும்...! முடிவுகளும்...!


நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக்
கூட்டம்... 02-08-2017 புதன்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு
NFTE., மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர்
தோழர். S.சின்னசாமி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.

மாவட்ட உதவிச் செயலர் தோழர். K.தேவராஜன் வரவேற்புரை......!
ஆற்ற., மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். 
M.வீரப்பன்.,
அஞ்சலி...! உரை...! நிகழ்த்தினார்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான.,
ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து, மாற்றல் கொள்கை
கால தாமதம், தோழர். ஆர்.கே., பணி ஊக்க பாராட்டு விழா,
மாவட்ட சங்க 
செயல்பாடுகள், இன்றைய சூழ்நிலை
மற்றும் 
ஊழியர் பிரச்சனைகள் பற்றி......!
அறிமுக 
உரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்... 24 கிளை செயலர்கள், 18 மாவட்ட சங்க...,
நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து
கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.

மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்.,
சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக... மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூற
இரவு 08-00 மணிக்கு தலைமை செயலகக் கூட்டம்...
இனிதே முடிவுற்றது.

தலைமை செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • 2017 மாற்றல் கொள்கையை., மாற்றல் கொள்கை விதிப்படி சுமூகமாக எந்த ஒரு ஊழியருக்கும் சாதக., பாதகங்கள் இல்லாமல் நியாயமான முறையில் விரைந்து முடித்திட., இச் செயலக கூட்டம் வலியுறுத்துகிறது (அ) வழி காட்டுகிறது. மேலும்...! மாற்றல் கொள்கையை... சுமூகமாக முடித்திட... மாவட்ட சங்கத்திற்கு., இச் செயலகக் கூட்டம் கூடுதல் அதிகாரம் அளிக்கிறது.
  • சென்னையில் நடைபெறும் தோழர். ஆர்.கே., பணி ஊக்க பாராட்டு விழா சிறக்க... நமது மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்க இச் செயற்குழு வலியுறுத்துகிறது.


இந்த... தலைமை செயலகக் கூட்டத்தில்... 75-க்கும் மேற்பட்ட...
தோழர்..., தோழியர்கள்... திரளாக... கலந்து...
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment