Wednesday 14 December 2016

நாளை ஒரு போராட்டம்... வீதிக்கு வா தோழா...


நாளை....,
2016 டிசம்பர் 15... BSNL நிறுவனம் காக்க...
செல் கோபுரம் காக்க...
ஒரு வேலை நிறுத்தப் போராட்டம்...
வீதிக்கு வா தோழா...

கடந்து போகும் எல்லா - தினங்களைப் 
போல்..., நாளை என்பது தினமல்ல...

நம்மையும்..., நம் இனத்தையும்...,
எந்நிலையிலும்..., காக்கும்...,
நம் BSNL துறையை..., காக்க..., 
நாம்..., பட்டக் கடன் திருப்பி செலுத்த...,
நமக்கு வரமாக கிடைத்த... வாய்ப்பு...

எனக்கென்ன...,
அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை...,
வராத வியாதிக்கு..., மருத்துவ விடுப்பு...
என்ற கேள்விகளுக்கு..., மத்தியில்...

இன்றே...,
நான்..., வேலை நிறுத்தம்..., 
என்ற உத்திரவாதம் தந்த...
எண்ணற்ற..., ஊழியர்கள்... அதிகாரிகள்...

அதே போல்..., 
ஊதியத்திற்கு முக்கியத்துவம் - தரும்...
ஊழியர்களுக்கு மத்தியில்...
உணர்வுக்கு முக்கியத்துவம்... தந்து...
இத்துறை காக்க..., 
எனது ஊதியத்தை தருகிறேன்...
என்ற உணர்வு தந்த...
ஒப்பந்த ஊழியர்கள்...

ஓய்வு பெற இரண்டு மாதம்...
இருப்பினும் - இது 
எனக்கு கிடைத்த வாய்பல்ல... வரம்...
எனது பங்களிப்பு - நிச்சயம்
என்ற உறுதி தந்த ஊழியர்கள்...
அனைவருக்கும்...! செவ்வணக்கம்...!!

துரோகிகளுக்கு மத்தியில்...
தியாகிகளின்...
எண்ணற்ற தியாகத்தால்...
இத் தேசம் நகர்வதைப் போல்...

நம் BSNL நிறுவனத்தில்...
நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக...  
பாடுபடும்... போராடும்...
ஊழியர் மற்றும் அதிகாரிகளின்...
எண்ணற்ற தியாகத்தால்...
நம் நிறுவனம்... வளர்ச்சியை...
நோக்கி... நகரும்...

பணி நாளில்... பணி நேரத்தில்... 
பணி செய்யாத... பக்தர்களின்...
வருகையை தவிர...,
நம் BSNL அலுவலகத்தில்...
காற்று மட்டும் நாளை வழக்கம் போல் சுற்றட்டும்...!
நாளை வேலை நிறுத்தம் வெல்லட்டும்...! வெல்லட்டும்...!!
வீதிக்கு...! வா...!! தோழா...!!!

No comments:

Post a Comment