Monday 24 October 2016

NFBW கூட்டமைப்பு சார்பாக...
நமது சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற...
மாலை நேர... பெருந்திரள் தர்ணா போராட்டம்...


























போனஸ் வழங்குதல்... ஊதியக்குழு உருவாக்குதல்... உள்ளிட்ட...,
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட போராட்டமாக,
24-10-2016 திங்கட்கிழமை அன்று..., மாலை 4.00 மணிக்கு...,
சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக...,
மாபெரும் பெருந்திரள் தர்ணா போராட்டம்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு... NFTE மாவட்ட தலைவர்... 
தோழர். S.சின்னசாமி, TEPU மாவட்ட தலைவர் தோழர். P.அன்பழகன்,
SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர். G.மணிவண்ணன்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

மிக எழுச்சியாக துவங்கிய... தர்ணா போராட்டத்தை...
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி
வைத்து..., சிறப்புரை ஆற்றினார்.

கோரிக்கைகளை..., விளக்கி...,
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், TEPU மாவட்ட
செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, SEWA-BSNL மாநில துணைத்
தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம் ஆகியோர்
கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி 
கூறி... தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

இரவு 07-30 மணி வரை நடைபெற்ற... இந்த தர்ணா போராட்டத்தில்...
150-க்கும் (15 பெண்கள் உள்பட) மேற்பட்ட தோழர், தோழியர்கள் திரளாக
கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்டத்தின் பல்வேறு 
பகுதிகளில் இருந்து தர்ணா போராட்டத்தில் கலந்து 
கொண்ட அனைத்து தோழர், தோழியர்களுக்கும் 
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பின் 
சார்பாக நன்றியை தெரிவித்துக் 
கொள்கிறோம்.

No comments:

Post a Comment