Friday, 2 September 2016

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்...
சார்பாக... நடைபெற்ற...
மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்...



12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி... நாடு முழுவதும் நடைபெற்ற...
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த...
போராட்டத்தையொட்டி... நமது சேலம் மாவட்டத்தில்...
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக... 02-09-2016 ன்று...
நமது BSNL மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக
மாபெரும் மறியல் மற்றும் கண்டன...
ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது.

இந்த மறியல் மற்றும்  ஆர்ப்பாட்டத்தில்...
AITUC மாவட்ட பொது செயலாளர் தோழர். M. முனுசாமி, AITUC
மாவட்ட துணை தலைவர் தோழர். P. பரமசிவம், AITUC
மாவட்ட செயலாளர் தோழர். விமலன், CITU மாவட்ட செயலாளர்
தோழர். உதயகுமார், INTUC மாவட்ட தலைவர் தோழர்.
ஸ்வர்ணராஜ், LPF மாவட்ட செயலர் தோழர். பொன்னி பழனியப்பன்,
AICCTU மாநில தலைவர் தோழர். சந்திரமோகன், HMS
மாவட்ட செயலர் தோழர். கோவிந்தராஜ்
ஆகியோர் பங்கேற்றனர்.

நமது BSNL தொழிற்சங்கங்கள் சார்பாக... 
NFTE மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், 
NFTE மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன், 
NFTE மு. மாநில துணைத் தலைவர் தோழர். P. ராஜா, 
மற்றும்... தோழமை சங்க தலைவர்கள்...
ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்ட தொழிற்சங்க வரலாற்று புத்தகத்தில்...
கூடுதலாக புதிய ஒரு பக்கத்தை நிரப்பிய... வரலாற்று சிறப்புமிக்க...
மாபெரும் மறியல் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில்...
தொலை தொடர்பு, வங்கி, காப்பீடு,  மத்திய, மாநில, பொதுத்துறை
நிறுவன தொழிற் சங்கங்கள், ஆட்டோ தொழிற்சங்கங்கள், 
கட்டிட மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் தொழிற்சங்கங்கள்,
ஒப்பந்த ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 
உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் 
கலந்து கொண்டனர்.

நமது BSNL நிறுவன தொழிற்சங்கங்களின் சார்பாக... 
100-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில்...
நமது NFTE சங்கத் தோழர்கள் மட்டும் 60-க்கும் மேற்பட்ட 
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
















No comments:

Post a Comment