தலைமை செயலகக் கூட்டமும்... முடிவுகளும்...
நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம்
03-02-2016 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட
சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர்.
S.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R.மணி வரவேற்புரை ஆற்ற...
மாவட்ட துணைத் தலைவர் தோழர். M.வீரப்பன் அஞ்சலி
உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான
ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட
சங்க செயல்பாடுகள், இன்றைய சூழ்நிலை, ஊழியர் பிரச்சனைகள்,
மாநில மாநாடு, 7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் மற்றும் பணிகள் பற்றி அறிமுக உரை ஆற்றினார்.
மாநில அமைப்பு செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் 28 கிளை செயலர்கள், 20 மாவட்ட சங்க
நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து
கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.
இறுதியாக... மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூற
மதியம் 02.30 மணிக்கு தலைமை செயலக கூட்டம்
இனிதே முடிவுற்றது.
தலைமை செயலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
- 5-வது மாநில மாநாட்டிற்கான நன்கொடையை அனைத்து கிளைகளும் 15-02-2016-க்குள் மாவட்ட சங்கத்திடம் வழங்கிட இச் செயலக கூட்டம் வலியுறுத்துகிறது.
- 7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு நன்கொடையாக கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தலா ரூ.1000/- மற்றும் உறுப்பினர்கள் தலா ரூ.100/- வழங்கிட வேண்டும் என செயலக கூட்டம் ஏக மனதாக முடிவு செய்கிறது.
- நமது சேலம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய தேர்தல் விளக்க சிறப்பு கூட்டத்தை 2016 மார்ச் இறுதிக்குள் நடத்தி முடிப்பது.
No comments:
Post a Comment