Wednesday, 23 December 2015

ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% IDA இணைப்பை வழங்கக்கோரி...
FORUM சார்பாக... நமது மாவட்டத்தில்... நடைபெற்ற...
ஆதரவு ஆர்ப்பாட்ட... நிகழ்வு மற்றும் காட்சிகள்...











ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய 78.2% சதவீத IDA
இணைப்பை உடனடியாக வழங்கக்கோரி... 22-12-2015 அன்று
"கருப்பு சின்னம்" அணிந்து நாடு தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட
மத்திய FORUM அறைகூவல் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் 
நமது சேலம் மாவட்டத்தில் FORUM சார்பாக 22-12-2015 அன்று 
மதியம் 12-30 மணி அளவில் "கருப்பு சின்னம்" அணிந்து 
பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆதரவு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு... AIBSNLEA மாவட்ட செயலர் தோழர்.
M.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி... SNEA மாவட்ட செயலர் தோழர்.
M.R.தியாகராஜன், NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும்
BSNLEU மாவட்ட செயலர் தோழர். E.கோபால் ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.

இறுதியாக... BSNLEU பொது மேலாளர் அலுவலக கிளையின்
செயலர் தோழர். N.பாலகுமார் நன்றி கூறி...
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.


எழுச்சியாக நடைபெற்ற... இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்...
150-க்கும் (20 தோழியர்கள் உட்பட) மேற்பட்ட ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment