Wednesday, 2 September 2015

2015 செப்டம்பர் 2 - பொது வேலை நிறுத்த...
பரப்புரை பயணக் கூட்டம் - 01-09-2015


நமது சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்ட முடிவின்
அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க 
01-09-2015 அன்று நகர கிளைகளில் 2-வது நாளாக 
பரப்புரை பயணம் நடைபெற்றது.

நகர கிளைகளில் நடைபெற்ற 2-வது நாள் பரப்புரை பயணத்தில்
மெய்யனுர் மற்றும் துணை பொது மேலாளர் (திட்டம்) 
அலுவலக கிளைகளில் வாயிற் கூட்டங்கள் 
நடைபெற்றது.

இந்த பரப்புரை பயணத்தில்... NFTE சார்பாக... மாவட்ட செயலர்
தோழர். C. பாலகுமார், மாநில அமைப்பு செயலர் தோழர். 
G. வெங்கட்ராமன், மாநில துணைத் தலைவர் தோழர். 
P. ராஜா, BSNLEU சார்பாக... மாவட்ட செயலர் தோழர். E. கோபால்,
மாவட்ட பொருளர் தோழர். C. செந்தில்குமார், மாவட்ட 
அமைப்பு செயலர் தோழர். M. பன்னீர்செல்வம் 
ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்து கிளைகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த NFTE 
மற்றும் BSNLEU சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள், 
கிளை செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் 
பெருந்திரளாக கலந்து கொண்டனர்.











No comments:

Post a Comment