Thursday 21 February 2019

தொடர்ந்து செல்... துணிந்து செல்...



நாடு முழுவதும் நமது மூன்று நாள் வேலை நிறுத்தம்...
மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது...
உணர்வோடு போராடிய தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்...

கண்ணிருந்தும் குருடாய்... காதிருந்தும் செவிடாய்...
தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளும்... 
தொலைத்தொடர்பு அமைச்சரும்...
மவுனம் காத்து நின்றனர்...

இந்த நிலையில்...
20-02-2019 அன்று கூடிய...
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு...
கீழ்க்கண்ட முடிவுகளை... அடுத்த கட்ட...
நடவடிக்கைகளாக... அறிவித்துள்ளது...

தொடர்ந்து...
நமது போராட்டங்களை...
முன்னெடுத்துச்... செல்வோம்...

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
  • 06-03-2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி.
  • 28-02-2019-க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்.
  • பாரத பிரதமர் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு ட்விட்டர் (Twitter) மூலம் கோரிக்கை மனு அனுப்புதல்.
  • தொலைத்தொடர்பு அமைச்சரை விரைவில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தல்.

எனவே தோழர்களே...
அடுத்த கட்ட நடவடிக்கைகளில்...
கவனம் செலுத்துவோம்...
நமது நியாயமான கோரிக்கைகளை...
தொடர்ந்து வலியுறுத்துவோம்...

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment