GPF-க்கான...! புதிய செயல்முறை...!
BSNL ஊழியர்களுக்கு இனிமேல் GPF (பொது வைப்பு நிதி).,
நேரடியாக தொலைத்தொடர்பு துறை (DOT) CCA மூலமாக தான்...,
(முன்பணம் (Advance) மற்றும் திரும்பபெறுதல் (Withdrawal).,)
பட்டுவாடா செய்யப்படும் என..., கார்ப்பரேட்
அலுவலகம் 18-04-2017 அன்று..........!
உத்திரவிட்டுள்ளது.
இந்த உத்திரவின் படி...:
- ஊழியர்கள் தங்களுடைய GPF முன்பணம் (Advance) மற்றும் திரும்பபெறுதல் (Withdrawal) தேவைக்கு ERP / ESS எனப்படும் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கப்பட்ட GPF படிவங்களை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி ஒப்புதல் செய்து நேரடியாக தொலைத்தொடர்பு துறை CCA அலுவலகத்துக்கு இமெயில் (e-mail) மூலம் அனுப்ப வேண்டும்.
- தொலைத்தொடர்பு துறை., CCA அலுவலகம் நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் GPF தொகையை வரவு வைத்து விடும்.
- இந்தப் பணிகள் இரண்டு கட்டமாக அமுல் படுத்தப்படும்.
- முதற்கட்ட 12 மாநில பணிகளில் முதல் பணியாக மேற்கு வங்காள CCA அலுவலகத்தில் 20-04-2017 அன்று GPF-ற்கான புதிய செயல்முறை பணிகள் துவங்கும். இப்பணியில் அஸ்ஸாம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் பங்கு பெறும். மேலும்...! வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இப்பணிகள் துவங்கப்படும்.
- தமிழகம் உள்ளிட்ட எஞ்சியுள்ள மாநிலங்கள் இரண்டாவது கட்ட பணிகளில் உள்ளது. இரண்டாவது கட்ட பணிகளின் துவக்கம் என்பது இந்த கால (முதற் கட்ட பணிகளின் கால.,) கட்டத்திற்குள் திட்டமிடப்படும்.
- அந்தந்த மாநிலங்கள் அந்தந்த பகுதி CCA அலுவலகங்களுடன் இணைந்து GPF-ற்கான புதிய செயல்முறை திட்ட பணிகளை PAN India முறையில் அமுல் படுத்திட வேண்டும்.
- GPF., தொலைத்தொடர்பு துறை CCA மூலமாக பட்டுவாடா செய்வதன் மூலமாக... இனி... ஊழியர்கள் விரைவாக GPF தொகையை பெற முடியும்.
- ஆனால்...! தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் விண்ணப்பிக்க முடியுமா...! என்பது கேள்விக் குறியாக உள்ளது.
No comments:
Post a Comment